தமிழர் பிரதேசங்களில் 12 இந்து ஆலயங்கள் அழிப்பு - காசி ஆனந்தன்!!

தமிழர் தாயக பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்ற சில இனவாத செயற்பாடுகளில் 12க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன என கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.


இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வலியுறுத்தி நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கூட்டத்தில் கவிஞர் காசி ஆனந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில், எங்களால் வாழ முடியவில்லை. இது எங்கும் பதிவு செய்யப்படாத ஒரு செய்தி. இல்லையென்றால் நான் திசைதிருப்புகிறேன் என்று கூட வெளியில் பேசுவார்கள்.

இலங்கையில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சமீப காலத்தில் 12 இந்து ஆலயங்கள், இஸ்லாமியர்களினால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.

தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகள் தோன்றியதற்கு முந்தைய காலமான கி.பி. 4ம் நூற்றாண்டில் உலக நாச்சியார் என்ற தமிழ் அரசி, மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவில் குளம் என்ற ஊரில் இந்து ஆலயத்தை கட்டினார். மிகவும் பழங்கால கோயிலான இதை, அண்மையில் இஸ்லாமியர்களை இடித்து நொறுக்கி, ஆலயத்திலிருந்து லிங்கத்தை எடுத்து எரிந்துள்ளனர். 20 கோயில்கள் வரை அங்குள்ள ஊர்களில் எரிக்கப்பட்டுள்ளன.

பெரும்பான்மையினர் செய்வது ஒருபக்கம். மற்றொரு பக்கம் முஸ்லிம்கள். இரு பக்கமும் அடிவாங்கும் மத்தளமாக அந்த மண்ணில் இந்துக்கள் மடிந்து கொண்டிருக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.