காணாமல்போன அனைவரும் இறந்துவிட்டனா்- ஐ.நாவுக்கு ஜனாதிபதி விளக்கம்!!

நாட்டில் விடுதலை புலிகளுடன் போா் நடைபெற்ற பகுதிகளில் காணாமல்போனதாக கூறப்படும் அனைவரும் இறந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச கூறியிருக்கின்றாா்.


ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கரை நேற்று சந்தித்தபோதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

அத்துடன் இச்சந்திப்பில் காணாமல் போனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான தனது திட்டங்களையும் ஜனாதிபதி எடுத்துக் கூறியுள்ளார்.

மேலும் காணாமல்போனவர்கள் உண்மையில் இறந்துவிட்டதாகவும், அவர்களில் பெரும்பாலானோா் விடுதலைப் புலிகளால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அல்லது கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர்கள் தொடர்பாக தேவையான விசாரணைகள் முடிந்ததும், காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு உரிய உதவிகளை வழங்கமுடியும் என்றும் இதன்போது தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.