அர்ஜுன மகேந்திரன் விவகாரம் தொடர்கின்றது – அரசாங்கம்!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் தொடர்பாக சிங்கப்பூருடன் இன்னும் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.


மத்திய வங்கி பிணை முறிகள் மோசடி தொடர்பான விசாரணைக்காக மகேந்திரனை ஒப்படைக்குமாரு இலங்கை அரசாங்கம் சிங்கபூரிடம் கோரியுள்ளது.

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பில் பேசிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மகேந்திரனை ஒப்படைப்பதற்கு உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், அந்த செயல்முறை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.

அர்ஜுன மகேந்திரனை ஒப்படைக்கக் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கையெழுத்திட்ட ஆவணங்கள் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் ஊடாக சிங்கப்பூர் அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.

மத்திய வங்கி மோசடி தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டமா அதிபர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் 9 பேருக்கு எதிராக நிரந்தர உயர்நீதிமன்ற விசாரணைக்கு முன் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தார்.

பின்னர் மத்திய வங்கி மோசடி தொடர்பாக மகேந்திரனை கைது செய்ய நிரந்தர உயர் நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.