மீன்பிடிக்கச்சென்றவர் பரிதாபமாக பலி!!

பொத்துவில், ரொட்டேவௌ குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சோகம் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த குளத்தில் இருவர் மீன்பிடித்த கொண்டிருந்த நிலையில் இருவரும் நீரில் முழ்கியுள்ளனர்.

இதனையடுத்து இருவரையும் காப்பாற்றி பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதித்த போதும் , இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர், 30 வயதுடையவர் என்றும் , பொத்துவில் பகுதியில் வசிப்பவரெனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.