கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!!
நானுஓயா சமர்செட் தோட்டம் ஈஸ்டல் பிரிவில் பிரதான வீதிக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்த நபருடைய மனைவிக்கும் சம்பவத்தில் உயிரிழந்த நபருக்குமிடையில் தகாத உறவுமுறை இருப்பதை அறிந்துகொண்ட கொலையாளி அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் புத்தளம் வென்னப்புவ பகுதியில் வசிக்கும் ஏ.ஜி.சசேந்திர பெர்ணாண்டோ (வயது -43) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவினர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதுடன், நீதவானும் மரணம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
மேலும் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன், கொலையாளியை கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாகவும் நானுஓயா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸாரும் நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்த நபருடைய மனைவிக்கும் சம்பவத்தில் உயிரிழந்த நபருக்குமிடையில் தகாத உறவுமுறை இருப்பதை அறிந்துகொண்ட கொலையாளி அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் புத்தளம் வென்னப்புவ பகுதியில் வசிக்கும் ஏ.ஜி.சசேந்திர பெர்ணாண்டோ (வயது -43) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவினர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதுடன், நீதவானும் மரணம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
மேலும் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன், கொலையாளியை கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாகவும் நானுஓயா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸாரும் நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo