கனரக வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!

பஸ் உட்பட அனைத்து கனரக வாகனங்கள் வீதியின் இடது நிரலில் மாத்திரம் செல்ல வேண்டும் என நகர வாகன மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் கமல் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
.கடந்த வெள்ளிக்கிழமை முதல் கொழும்பு வாகன போக்குவரத்துப் பிரிவு இந்த நடைமுறையை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டத்தை மீறிய 500 சாரதிகளுக்கு இக் காலப்பகுதிக்குள் இது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு நகரில் வாகன நெரிசலுக்கு கனரகவாகன சாரதிகள் இடதுபக்க நிரலைப் பயன்படுத்தாமையே இதற்கான காரணம் என்றும் இந்த விதிகளைமீறுவோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நகரத்தை அலங்கரிக்கும் நடவடிக்கைதொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் நகர வாகன மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பொலிஸ்பிரிவின் பணிப்பாளர் கமல் புஷ்பகுமார தெரிவித்தார்.

இதேவேளை பஸ்களில் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பாடல்கள் இடம்பெறாதுவிட்டால் அது தொடர்பாக பயணிகள் 119 என்ற தொலைபேசி மூலம் அறிவிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.