நித்தியானந்தாவை கைதுசெய்ய இன்ரர்போல் ‘Blue Corner Notice’ வெளியீடு!

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவை கைதுசெய்வதற்கு சர்வதேச விசாரணை அமைப்பான இன்ரர்போல் ப்ளூ கோர்னர் நோட்டீஸ் (Blue Corner notice) வெளியிட்டுள்ளது.


சாமியார் நித்தியானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில், அவரைப் பிடிப்பதற்கு சர்வதேச புலனாய்வு அமைப்பான இன்ரர்போலிடம் உதவி பெறும் வகையில் குஜராத் மாநில பொலிஸார் குற்றவியல் விசாரணைத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதேசமயம், நித்தியானந்தாவைக் கண்டுபிடிக்க உயர் நீதிமன்றம் விதித்த கெடு முடிவடைந்த நிலையில்,  நித்தியானந்தாவுக்கு எதிராக புளூ கோர்னர் நோட்டீஸ் வழங்கக் கோரி டெல்லி  சி.பி.ஐ. மற்றும் இன்ரர்போல் அலுவலகத்திற்கு குஜராத் மாநில பொலிஸார் கடிதம் எழுதியிருந்தனர்.

குறித்த கடிதங்களை ஏற்றுக்கொண்ட இன்ரர்போல் ப்ளூ கோர்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.