ஜயம்பதி விக்ரமரத்ன இராஜினாமா – சமன் ரத்னபிரிய நியமனம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்துள்ள நிலையில் அந்த வெற்றிடத்துக்கு சிவில் சமூக ஆர்வலர் சமன் ரத்னபிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.


ஜயம்பதி விக்ரமரட்னவின் இராஜினாமா தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சமன் ரத்னபிரிய நியமிக்கப்பட்டுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன  தனது நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவதாக நாடாளுமன்றத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

அந்தவகையில் இந்த ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி முதல் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியிருப்பதாக இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க இன்று சபையில் அறிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தனக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு செயலாளர் நாயகம் உள்ளிட்ட நாடாளுமன்ற பணியாட் தொகுதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அக்கடிதத்தில் ஜயம்பதி விக்ரமரத்ன சுட்டிக்கட்டியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.