உன் மூச்சின் உஷ்ணமும்...!!
நேச முகம் நெருங்கும் வேளை
ஓடி வந்து ஒட்டிக்கொள்ளும்
உன் மூச்சின் உஷ்ணமும்...
துயிலின் நடுவில் திடுக்கிடும் போது
துணையாகும் உன் அணைப்பின்
தட்பமும்...
ஆண்டுகள் பலவான போதும்
நெஞ்சுக்குள் இன்னும் இனிக்கிறது
முதல் ஸ்பரிசத்தின் சிலிர்ப்பாய்....
ரஹ்மானும் சித்ராவும் இணைந்தே
இசையமைக்கிறார்கள் என்னுள்.
உன்னோடு நானிருக்கும்
மணித்துளிகளில் எல்லாம்....
பாதித் தூக்கத்தில் என் கன்னத்தோடு
ஒட்டிக்கொள்ளும் முத்தம்
அதிகாலை பனியின்
இதமான சுகத்தையே மிஞ்சிவிடுகிறது...
உன் அன்னையின் மேல்
பொறாமைப்பட்டுக்கொள்கிறது
என் இதயம்
எத்தனை முத்தங்களை பெற்றிருப்பாரோ...??
-சங்கரி சிவகணேசன்-
ஓடி வந்து ஒட்டிக்கொள்ளும்
உன் மூச்சின் உஷ்ணமும்...
துயிலின் நடுவில் திடுக்கிடும் போது
துணையாகும் உன் அணைப்பின்
தட்பமும்...
ஆண்டுகள் பலவான போதும்
நெஞ்சுக்குள் இன்னும் இனிக்கிறது
முதல் ஸ்பரிசத்தின் சிலிர்ப்பாய்....
ரஹ்மானும் சித்ராவும் இணைந்தே
இசையமைக்கிறார்கள் என்னுள்.
உன்னோடு நானிருக்கும்
மணித்துளிகளில் எல்லாம்....
பாதித் தூக்கத்தில் என் கன்னத்தோடு
ஒட்டிக்கொள்ளும் முத்தம்
அதிகாலை பனியின்
இதமான சுகத்தையே மிஞ்சிவிடுகிறது...
உன் அன்னையின் மேல்
பொறாமைப்பட்டுக்கொள்கிறது
என் இதயம்
எத்தனை முத்தங்களை பெற்றிருப்பாரோ...??
-சங்கரி சிவகணேசன்-