அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதியங்களுக்கான திருத்தங்கள் இடைநிறுத்தம் – அரசாங்கம்!!

அரசாங்க ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான திருத்தங்கள் அடங்கிய பொது நிர்வாக சுற்றறிக்கையை அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.


பொது சேவை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 10.12.2019 அன்று வெளியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கை 35/2019 இன் விதிகளை அமுல்படுத்துவதை அமைச்சு நிறுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 2 ஆம் திகதி கூடிய அமைச்சரவை, அனைத்து ஓய்வூதியதாரர்களின் முரண்பாடுகள், அடுத்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தீர்க்கப்படும் வரை இதனை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக எஎஸ்.ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.