சைக்கோவை வெட்டாத சென்சார் குழு!

சைக்கோ திரைப்படத்தில் ஒரு சைக்கோ கொலைகாரனும், அவனைப் பிடிக்கத் துரத்தும் போலீஸ் படையும் என்ற அதே பழைய கதை தான் என்றாலும் டீசர், டிரெய்லரில் இடம்பெற்ற காட்சிகளும், காட்சியமைப்புகளும் இதுவரை இந்திய சினிமா கண்டிராத அடர்த்தியான கதைக்களம் என்பதை உறுதிபடுத்தியது.


இதனால் தன்னுடைய தனித்தன்மையான சினிமா பார்வையால் ரசிகர்களின் பேராதரவை பெற்ற மிஷ்கினின் சைக்கோ படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியது. ஏற்கனவே யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஆகிய திரைப்படங்களில் வன்முறைக்கு புது வடிவம் கொடுத்திருந்தாலும், சைக்கோ திரைப்படத்தின் காட்சிகளை பார்க்கையில் உருவாகும் ஆர்வத்தை ரசிகர்களால் அடக்கமுடியவில்லை.

இதற்கு முன்னர் ஹிந்தியில் அனுராக் கஷ்யப் இயக்கத்தில் வெளியான ராமன் ராகவ் 2.0 திரைப்படம் திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களை அதிரவைத்தது. அதன்பிறகு தமிழில் ராம் குமார் இயக்கிய ராட்சசன் திரைப்படம் ஓரளவு அந்த பதைபதைப்பைக் கடத்தியது. கடைசியாக மிஷ்கினின் சைக்கோ திரைப்படம் தான் ஒரு சரியான சைக்கோ த்ரில்லராக தயாராகிறது என்று ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு பாராட்டைப் பெற்றிருந்தது. அதை உறுதிபடுத்தும் விதமாக சைக்கோ படத்திற்கு தணிக்கை குழு எந்தக் காட்சியையும் நீக்காமல் ‘A’ சர்டிஃபிகேட் வழங்கியுள்ளது. நான்கு காட்சிகளில் இடம்பெறும் வசனங்களுக்கு மட்டும் ஒலி நீக்கப்பட்டுள்ளது.

மிஷ்கினின் சைக்கோ திரைப்படம் வரும் ஜனவரி 24 அன்று வெளியாக இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ், ராம், சிங்கம்புலி மற்றும் பலர் நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதன் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.