முல்லைத்தீவு நீதிமன்றம் வழங்கிய வரவேற்கத்தக்க தண்டனை!

சட்டவிரோதமாக மரம் வெட்டி கடத்தி மற்றும் அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்த குற்ற்அச்சாட்டில் நபர் ஒருவருக்கு அபதாரத்துடன் 100 மரக்கன்றுகள் நடுமாறு முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


குறித்த வழக்கு நேற்று முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்றது.

இதன்போது வழக்கினை விசாரித்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி குறித்த உத்தரவை வழங்கியுள்ளார்.

aத்துடன் வெட்டப்பட்ட மரம் மற்றும் சேதமாக்கப்பட்ட அரச சொத்துக்களிற்காக ரூபா ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்துமாறும், வன வள பாதுகாப்பு பிரிவின் அறிவுறுத்தலிற்கமைவாக 100 மரக்கன்றுளை நாட்டுமாறும் இதன்போது நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சட்டவிரோத மர கடத்தல்கள் தொடர்பில் நீதிமன்றில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மரக்கடத்தலில் சிக்கிய சந்தேக நபருக்கு நீதிமன்றம் வழங்கிய இந்த தண்டனையை பலரும் வரவேற்றுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.