நகரசபையில் மறைந்த ஊடகவியலாளருக்கு கௌரவம்!!

மறைந்த ஊடகவியலாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரிக்கு வவுனியா நகரசபையில் அகவணக்கத்துடன் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.


வவுனியா நகரசபையின் அமர்வு இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு இ.கெளதமன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையிலேயே  சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

நகரசபையின் தலைவரினால், அண்மையில் மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரிக்கு அக வணக்கம் செலுத்தி சபை ஆரம்பிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் அனைவரும் எழுந்து ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தினர்.

இதன்போது உறுப்பினர்களுடன், செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்களும் அகவணக்கம் செலுத்தி தமது மரியாதையை வழங்கினர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.