இரா.சம்பந்தனுக்கு அமைச்சரவை அனுமதி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தற்போது தங்கியுள்ள அரச வாசஸ்தலத்தில் தொடர்ந்தும் தங்க அனுமதியளிப்பது என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளது.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இன்று(22) அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடந்தது.

இதன்போது இந்த விடயம் குறித்து பொது நிர்வாக அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் பணியாற்றியசமயம் வழங்கப்பட்ட இந்த அரச வாசஸ்தலம் அவருக்கு இப்போதும் வழங்கப்பட்டிருப்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளதால் அரசு இது விடயத்தில் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டுமென இதன்போது பேசப்பட்டது.

எவ்வாறாயினும் கட்சித் தலைவர் மற்றும் அவரின் வயதை கருத்திற்கொண்டு இந்த வாசஸ்தலத்தில் தொடர்ந்து சம்பந்தன் வசிக்க அனுமதியளிப்பதென அமைச்சரவை தீர்மானித்தது.

அத்துடன் அவருக்குரிய ஏனைய வசதிகளிலும் மாற்றங்களை செய்வதில்லை என்றும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.