மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

மட்டக்களப்பு புலிபாய்ந்தகல் கோரக்களப்பு குளப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இந்த விபத்து நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

உழவு இயந்திரம் துவிச்சக்கரவண்டியுடன் மோதுண்டதில், துவிச்சக்கரவண்டியில் பயணித்த கிரான் விஷ்ணுகோவில் வீதியைச் சேர்ந்த 54 வயதுடைய முத்துலிங்கம் குணசேகரன் என்ற விவசாயியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக உழவு இயந்திர சாரதியை கைது செய்துள்ள பொலிஸார், உயிரிந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.