ஷானி அபேசேகர குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலை!!

குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார்.


அதற்கமைய அவர் இன்று (வியாழக்கிழமை) காலை அங்கு முன்னிலையாகியுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.

ரஞ்சன் ராமநாயக்க மாதிவெலயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து கடந்த நான்காம் திகதி கைது செய்யப்பட்டார்.

இதன்போது பல இறுவட்டுக்கள் அவரின் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டன. இதனையடுத்து குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா  உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பான குரல் பதிவுகள் அனைத்தும் பகிரங்கமாகியிருந்தன.

இதனையடுத்து  ஷானி அபேசேகர அண்மையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் குறித்த தொலைபேசி உரையாடல்கள் குறித்து விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், அவர் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.