யாழிலிருந்து கிழக்கு நோக்கிசென்ற பயணிகள் பேரூந்து கோர விபத்து!!

மட்டக்களப்பு – கல்முனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் மின்கம்பம் உடைந்து வீழ்ந்ததில் பிரதேசத்திற்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கல்முனை, குருக்கள்மடம் பகுதியில் இன்று அதிகாலை பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.இதன்போது மின்கம்பம் உடைந்து வீழ்ந்ததில் பிரதேசத்திற்கான மின் விநியோகம் திடீரென துண்டிக்கப்பட்டுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து திருக்கோவில் சென்று கொண்டிருந்த பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் குருக்கள்மடம் ஐயனார் கோயிலுக்கு முன்னால் வீதி மருங்கிலிருந்த மின்கம்பத்தில் மோதுண்டுள்ளது. மின்கம்பம் இரண்டாக முறிந்து பேருந்தில் வீழ்ந்துள்ள போதும் எவ்வித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஆயினும் பேருந்திற்குச் சேதமேற்பட்டுள்ளதோடு, களுவாஞ்சிக்குடி மின் விநியோகப் பிரதேசத்தில் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டுள்ளது.இவ்விபத்து தொடர்பில் காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.