குடாநாட்டில் திடீர் சுற்றிவளைப்பு - பலர் கைது!

பொலிஸ் மா அதிபரின் அறிவித்தலுக்கு அமைய நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு தேடுதல்கள் நேற்று இடம்பெற்றது.


அந்தவகையில் யாழ்.குடாநாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடா்பட்ட 38 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த சுற்றிவளைப்பின் போது 19 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 12 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சிறு குற்றங்களை புரிந்த ஐந்து சந்தேகநபர்கள் என மொத்தமாக 38 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் பிராந்திய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட பொலிஸார் குடாநாட்டில் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.