ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் அஜித் பிரசன்னவுக்கு விளக்கமறியல்!!

ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் அஜித் பிரசன்னவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த அழைப்பாணைக்கமைய இன்று நீதிமன்றத்தில் அஜித் பிரசன்ன முன்னிலையாகியப்போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் நீதவான் திலின கமகேவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வழக்கு ஒன்று தொடர்பாக, கடந்த தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்ததன் ஊடாக நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது தொடர்பாக ஆராய்வதற்காகவே அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.