ஈ, கோ... - கவிதை!!

"ஈ, கோ" என்பது,

தான் என்ற எண்ணத்தை

மட்டும் மனதில் கொண்டு

"அடம் பிடிப்பதும்"


தனக்கு மிஞ்சி வேறொன்றும்

இல்லை, என்று "அகம்பாவமும்"

கொண்ட "மனித உறவுகளில்"

ஏற்ப்படும் "கருத்து

வேறுபாடுகளே"

"ஈ, கோ" எனப்படும்.

"ஈ, கோ" என்பது "மனித

உறவுகளில்" ஒட்டி வாழும்

ஒரு ஒட்டுண்ணியாகும்.

"ஒட்டுண்ணி"என்பது

பிற உயிர்களிடம் அண்டி

"இரத்தத்தை" மட்டும்

உறிஞ்சி வாழும் ஒரு

உயிரினமாகும்.

அது போல்

"ஈ, கோ" என்பதும் மனித

உறவுகளில் அண்டி

மனிதனின் இன்பம், தூக்கம்,

நிம்மதியை சீர்

குலைத்து கடைசியில்

"உயிரையே" உறிஞ்சிக்

கொன்றுவிடும் ஒரு

விஷக் கிருமியாகும்.

சாதாரணமாக

மனிதனுக்கு ஈ, என்றாலே

"அருவருப்பு" ஆனால், அது

நாம் உண்ணும்

உணவில் அண்டினால்

மனித உடம்புக்குத்

தான் "நோய்" விளைவிக்கும்,

அதை மருத்துவரிடம்

காண்பித்து சரி செய்து

விடலாம். ஆனால் மனித

உறவுகளில் அண்டி வாழும்

"ஈ, கோ" என்பது மனிதனின்

"மனதுக்கு" நோய் உண்டாக்கிவிடும்,

அதை எந்த

மருத்துவராலும் சரி செய்ய

முடியாது.

ஆகையால்

மனிதன் உறவுகளை வலுப்படுத்த

கோ, கோ, வென்று விரட்ட வேண்டும்,

"ஈ, கோ" வை

நான் விரட்டிட்டேன்

அப்போ நீங்க???

சிவாஜி சீனு
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.