ஜனாதிபதியின் உத்தரவில் வறுமையை ஒழிக்க புதிய செயலணி!!

வறுமையை ஒழிக்க மற்றும் வாழ்கைத் தரத்தை உயர்த்துவதற்காக 12 பேர் அடங்கிய செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.


ஓய்வுப் பெற்ற பிரதி திறைசேரி செயலாளர் எஸ்.பிதிவாரத்ன தலைமையிலான இந்த செயலணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற அமைச்சுக்களின் செயலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், விஷேட மருத்துவர்கள் உள்ளிட்ட துறைகளை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இந்த செயலணிக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த செயலணி மூலம் குறைந்த வருமானத்தை பெறும் மக்களின் பிரச்சினைகள் ஆராயப்படவுள்ளன.

சுகாதாரம், போசாக்கான உணவுகளை உட்கொள்ள செய்தல் மற்றும் சுற்றாடலை பாதுகாத்தல் போன்ற செயற்பாடுகள் இந்த செயலணியின் முக்கிய செயற்பாடுகளாகும்.

அத்துடன் கிராம மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதலும் இந்த புதிய ஜனாதிபதி செயலணியின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.