திருகோணமலை கந்தளாயில் விபத்து!!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முச்சக்கர வண்டியொன்றும்,மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ஐவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இவ்விபத்துச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கந்தளாய் வாத்தியாகம சந்தியில் இடம்பெற்ற இவ்விபத்தில் கந்தளாய் பகுதியியைச் சேர்ந்த நிலந்த குமார வயது(23),சோமபால வயது(45),நிரோசன் வயது(19),மற்றும் 32 வயதுடைய ஐவரே இவ்வாறு படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் நகரிலிருந்து வாத்தியாகம பகுதிக்குச் சென்ற முச்சக்கர வண்டியும்,கந்தளாய் பிரதான வீதிக்கு சென்ற மோட்டார் சைக்கிலுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும் அதிக வேகமாக இவ்விபத்து ஏற்பட காரணமென தெரிவித்துள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.