ரயில் தடம்புரள்வு – மலையகத்திற்கான சேவைகள் பாதிப்பு!!

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பொருட்களை ஏற்றிசென்ற ரயிலொன்று நானுஓயா மற்றும் பெரக்கும்புர ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம்புரண்டுள்ளது.


இதனால் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா ரயில் நிலையத்தின் ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் இதனால் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி செல்லும் ரயில் நானுஓயா ரயில் நிலையம் வரையும் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் ரயில் அம்பேவெல ரயில் நிலையம் வரையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த ரயில் நிலையங்களிலிருந்து பேருந்துகள் மூலம் பயணிகளை மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரயில் பாதையை சீரமைத்து வருவதாகவும் இரவுக்குள் சீரமைத்து மலையக ரயில் சேவையை வழமைக்கு திருப்பலாம் என நானுஓயா ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.