கொழும்பு துறைமுகத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டு கப்பல்கள்!!

பிலிப்பைன்ஸ் நாட்டு கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.


ரமோன் அல்கராஸ் மற்றும் டவோ டெல்சூர் ஆகிய இரண்டு கப்பல்களே இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

குறித்த கப்பல்களில் வருகை தந்துள்ள கட்டளைத் தளபதி உள்ளிட்ட குழுவினர், தன்னார்வ கடற்படை தலைமையகத்தின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் அவர்கள் இலங்கையில் நாளை மறுதினம் வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளனர்.

மேலும் குறித்த குழுவினர், கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ள விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகளிலும் கலந்துக்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Blogger இயக்குவது.