நீதித்துறை சுயாதீனமாக உள்ளது என கூறுவதற்கு ஆட்சியாளர்களுக்கு தகுதி இல்லை – சுமந்திரன்!!

இலங்கையில் நீதித்துறை சுயாதீனமாக உள்ளது என கூறுவதற்கு இந்த ஆட்சியாளர்களுக்கு தகுதி இல்லை என சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.


கிளிநொச்சியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “நீதித்துறை சுயமாக செயற்படாதவாறு பலர் செயற்படுகின்றனர். நீதித்துறையை சுயாதீனமாக செயற்படவிடவில்லை என பலர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

முக்கியமாக வழக்குகள் இவ்வாறு நடத்தப்படாது தடை செய்யப்படுமாக இருந்தால் இதைவிட நீதித்துறையில் தலையீடு வேறு எதுவுமாக இருக்க முடியாது.

பல சம்பவங்கள் இருக்கின்றன. உங்களுடைய பிரதேசங்களிலேயே பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இது இப்படியாக நடக்குமாக இருந்தால், இந்தநாட்டிலே நீதித்துறை சுயாதீனமானது என்று சொல்வதற்கு இந்த ஆட்சியாளர்களிற்கு தகுதி இல்லை” என அவர் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.