சமன் ரத்னபிரியவை நாடாளுமன்ற உறுப்பினராக்கும் வர்த்தமானி வெளியீடு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியலில் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன பதவி விலகியதை அடுத்து அப்பதவிக்கு சமன் ரட்னபிரியவை நியமிப்பதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.


ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்துள்ள நிலையில், அந்த வெற்றிடத்துக்கு சிவில் சமூக ஆர்வலர் சமன் ரத்னபிரிய அண்மையில் நியமிக்கப்பட்டார்.

ஜயம்பதி விக்ரமரட்னவின் இராஜினாமா தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி முதல் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியிருப்பதாக ஜயம்பதி விக்ரமரத்ன இராஜினாமா கடிதத்தை  சமர்ப்பித்திருந்தார்.

இதனையடுத்து கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சமன் ரத்னபிரிய நியமிக்கப்பட்டார் என்பத குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




Blogger இயக்குவது.