சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு!!

இலங்கையின் சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த அழைப்பினை வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி விடுத்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், இறுதி யுத்தத்தில் கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகள் தொடர்பாக அரசு அக்கறை செலுத்தாத நிலையில், சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு அரசு தயாராகி வருகின்றது.

இந்த நிலையில், சுதந்திர தினத்தை துக்க தினமாக அனைத்து மக்களையும் அனுஷ்டிக்குமாறும் அன்றைய தினம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

இதேவேளை குறித்த தினத்தன்று வடக்கிலும் கிழக்கிலும் சம நேரத்தில் போராட்டங்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.