வேகமாக பரவும் மற்றுமொரு வைரஸ் – 29 பேர் உயிரிழப்பு!!

நைஜீரியாவில் பரவிவரும் லஸ்ஸா (Lassa) காய்ச்சல் காரணமாக இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.


ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி இதுவரையில் 106 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், 4515 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த டிசம்பர் மாத இறுதியில் வூகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி, பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், நைஜீரியாவில் லஸ்ஸா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த காய்ச்சல் காரணமாக நைஜீரியாவில் 11 மாகாணங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்கு ஆபிரிக்க நாடுகளில் லஸ்ஸா வைரஸ் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நைஜீரியா அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.