தொடர்ந்தும் மட்டக்களப்பில் டெங்கின் தாக்கம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் தாக்கம் அதிகரித்து வருவதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்தியர் வி.குணராஜசேகரம் தெரிவித்துள்ளார்.


இவ்வருடம் ஜனவரி 18ஆம் திகதி தொடக்கம் 2020 ஜனவரி 24ஆம் திகதி வரையும் 201 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், “இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 38 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

மேலும், ஆரையம்பதியில் 35, களுவாஞ்சிகுடியில் 21, வாழைச்சேனையில்16, செங்கலடியில் 22, காத்தான்குடியில் 14, ஏறாவூரில் 05, வெல்லாவெளியில் 04, வவுணதீவில் 06, பட்டிப்பளையில் 06, ஓட்டமாவடியில் 10, கோறளைப்பற்று மத்தியில் 18, கிரானில் 06 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.