ரஞ்சன் ராமநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு!

சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.


குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) நுகேகொட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோதே அவரை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக விசாரணைளை மேற்கொண்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, கடந்த 14 ஆம் திகதி மாதிவெலயிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சமூக வலைத்தளங்களில் வெளியான தொலைபேசி உரையாடல்கள் மூலம் ரஞ்சன் ராமநாயக்க, நீதிபதிகளின் செயற்பாடுகளுக்கு தலையீடு செய்துள்ளதாகவும் இது அரசியலமைப்பின் 111 ஆவது சரத்தின் கீழ் குற்றம் என்பதனால் அவர் கைது செய்யப்பட்டார்.

இதனை அடுத்து இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.