கொரோனா எதிரொலி - இலங்கை குறித்து பிரித்தானியாவின் முடிவில் மாற்றம்!

கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவிவரும் நிலையில், இலங்கை குறித்த தனது பயண ஆலோசனையை பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் அலுவலகம் புதுப்பித்துள்ளது.


இலங்கையில் ஒரு நோயாளிக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதையும் பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரம், ஹூபே மாகாணத்தில் பரவியிருந்தாலும் அதன் பின்னர் சீனாவில் இருந்து பிற நாடுகளுக்கும் குறிப்பாக 17 நாடுகளுக்கு அந்த நோய்த் தொற்று பரவியது.

இந்நிலையில் வைரஸ் பரவாமல் தடுக்க இலங்கை அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது.

அந்தவகையில் 24 மணித்தியால ஹொட்லைன் சேவை மற்றும் இலங்கையின் விமான நிலைய வளாகத்தில் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.