சமூக ஊடகங்கள் மூலம் இந்தோனேசியர்களை வேலைக்கு எடுத்த மலேசியர் கைது!!

சமூக ஊடகங்கள் மூலம் மலேசியாவில் வீட்டு வேலை எனக் கூறி இந்தோனேசியர்களை சட்டவிரோதமாக
வேலைக்கு எடுத்து  வந்த மலேசிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நபர் சட்டவிரோதமாக இந்தோனேசிய தொழிலாளர்களை மலேசியாவுக்கு அனுப்பும் வேலையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது.

“இந்த சந்தேக நபருக்கு இந்தோனேசிய தொழிலாளர்களை வேலைக்கு  தேர்வு செய்ய அனுமதியில்லை,” எனத் தெரிவித்துள்ளார் Riau தீவு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Blogger இயக்குவது.