டெங்கு தடுப்பு உதவியாளர்கள் போராட்டம்!!

டெங்கு தடுப்பு உதவியாளர்கள் நிரந்தர நியமனம் கோரி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.


அம்பாறை மாவட்டம்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பணிமனை முன்னால் ஒன்று கூடிய உதவியாளர்கள் தம்மை நிரந்தர சேவைக்குள் உள்ளீர்க்குமாறு பல்வேறு சுலோகங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணியளவில் குறித்த போராட்டம் ஆரம்பமானதுடன் சுமார் கல்முனை பிராந்தியத்தினை சேர்ந்த டெங்கு தடுப்பு உதவியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தமது நியாயமான கோரிக்கைகள் இரண்டரை வருடங்களாக எந்த தரப்பினரும் கருத்தில் எடுக்கவில்லை எனவும் தற்காலிகமாக முன்னெடுக்கப்படும் குறித்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க முயன்றால் இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் டெங்கு ஒழிப்பு திட்டங்கள் பாதிக்கப்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.