யாழ்.போதனா வைத்தியசாலையில் தயார் நிலையில் விசேட மருத்துவர் குழு!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை வழங்க தேவையான சகல ஒழுங்குகளும் செய்யப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.


சீனாவில் கொரனோ தொற்று அபாயம் ஏற்பட்டதனையடுத்து உலகின் பல பகுதிகளிலும் அந்த அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையிலும் கொரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டதனால் , அதனை எதி்ர்கொள்ளக் கூடிய வகையில் 12 வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சு இனம்கண்டது.

இதில் யாழ் போதனா வைத்தியசாலையும் ஒன்று. இந்நிலையில் வடக்கிலோ அல்லது யாழ்.குடாநாட்டிலோ அவ்வாறான சந்தேகத்திற்கிடமாக எவராவது காணப்பட்டால் யாழ்.போதனா வைத்தியசாலையிலே அனுமதிக்க வேண்டிய நிலமை ஏற்படலாம் .

அவ்வாறான நிலமை ஏற்பட்டால் ஒரே தடவையில் உச்ச பட்சமாக 10 பேர் இனம் காணப்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கு ஏற்ற ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதற்காகவே ஓர் விசேட மருத்துவக் குழுவினையும் தயார் செய்துள்ளதாக கூறிய அவர், நோயாளி ஒருவர் இனம்காணுமிடத்தில் அவரை குறித்த விசேட மருந்துவக் குழு ஆய்விற்கு உட்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் பாதிக்கப்பட்டவரின் குருதியின் மாதிரியை எடுத்து பகுப்பாய்விற்காக அனுப்பி உச்ச பட்சமாக 48 மணி நேரத்திற்குள் உறுதியான முடிவினைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.