மாணிக்கக் கங்கையில் குளித்த 34 இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நீதவான்!!

செல்லக் கதிர்காமம் மாணிக்கக் கங்கையில், குளித்துக்கொண்டிருந்த 34 இளைஞர்களை கடுமையாக எச்சரித்த நீதவான், 34 பேருக்கும் தலா 5000 ரூபாய் வீதம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.


அத்துடன் மீண்டும் 34 பேரையும், ஜுன் மாதம் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து கதிர்காமத்துக்கு யாத்திரைக்குச் சென்றிருந்த குறித்த இளைஞர் கூட்டம், அங்குள்ள விடுதியில் தங்கியிருந்து மதுபானம் அருந்தியுள்ளனர்.

அதன் பின்னர், அவர்கள் யாத்திரகர்கள் நீராடும் மாணிக்க கங்கைக்கு ​சென்ற அவர்கள், திடீரென்று நிர்வாணமாக நீராடுவதற்கு ஆரம்பித்துள்ளனர்.

இதன் பின்னர், அங்கிருந்த மற்றைய இளைஞர்கள், நாகரீகமாக நடந்துகொள்ளுமாறு எச்சரித்ததையடுத்து, எச்சரிக்கை விடுத்த இளைஞர் குழுவிலிருந்த இளைஞனர் ஒருவரை, அவர்கள் தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் அது குழு​மோதலாக மாறியதையடுத்து, நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் காயமடைந்து, கதிர்காமம் அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்தகதிர்காமம் பொலிஸார், அநாகரிகமாக நடந்துகொண்ட 34 பேரையும் கைது செய்து, நேற்று பிற்பகல், திஸ்ஸமகாராமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர்.

இதன்போதே குறித்த இளைஞர்களுக்கு, அபராதம் விதித்த நீதவான் அவர்களை எச்சரித்துமுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.