நிவாட் கப்ரால் உடன் பதவி நீக்கப்பட வேண்டும்- அஜித் பி பெரேரா!!

மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பான தடவியல் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுவதற்கு முன்னரே அதன் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அந்த அறிக்கை தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவது பெறும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


எனவே அவர் நிதி அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும். அல்லது அரசாங்கம் அவரை பதவி நீக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்த அரசாங்கம் ஊழல் மோசடிகளுக்கு எதிரானது என்பது உண்மையென்றால் அஜித் நிவாட் கப்ரால் உடன் பதவி நீக்கப்பட வேண்டும். அல்லது அவர் தானாகவே பதவி விலக வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.