நடைமுறைக்கு வருகிறது சிறப்பு போக்குவரத்து செயற்றிட்டம்!!

72ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு போக்குவரத்து திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.


குறித்த சிறப்பு போக்குவரத்து செயற்றிட்டம் இன்று முதல் ஆரம்பமாகி  இந்த மாதம் 4 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.

பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பாதுகாப்பான தேசம், சுபீட்சமான நாடு’ என்ற தலைப்பில் இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

சுதந்திர தினத்தன்று வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், வீடுகளில் மரக்கன்றுகளை நாட்டுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள முன்னோட்ட நிகழ்ச்சிகள் எதிர்வரும் 26ஆம், 31ஆம் திகதிகளிலும், பெப்ரவரி மாதம் முதலாம், 2ஆம், 3ஆம் திகதிகளிலும் இடம்பெறவுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.