உள்ளூர் தொழிலதிபர்களை பாதுகாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்- விமல்!

உள்ளூர் தொழிலதிபர்களை பாதுகாக்க வேண்டிய கடமை எங்களது அரசாங்கத்துக்கு உள்ளதென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


மாத்தறையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கூட்டத்தில் மேலும் கூறியுள்ளதாவது, “தொழில்முனைவோருக்கு மலிவு வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கும் திட்டம் எதிர்காலத்தில் நிறுவப்படும்.

அத்துடன் உள்ளூர் தொழிலதிபரை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் தற்போதைய அரசாங்கம் உள்ளது.

மேலும் வரிக் கொள்கையை உள்ளூர் தொழிலதிபர் மற்றும் தொழில்முனைவோர்தான் தீர்மானிக்க வேண்டும்.

அந்தவகையில்  வியாபாரத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி பல முடிவுகளை எடுத்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.