பெற்றவர்களின் தொலைபேசி அழைப்பை அலட்சியம் செய்யாதீர்!
பெற்றவர்களின் தொலைபேசி அழைப்பை அலட்சியம் செய்யாதீர். பின்னர் அவர்கள்
இலக்கம் மட்டுமே எமது தொலைபேசியில் பதியப்பட்டிருக்கும். அதிலிருந்து எந்த
அழைப்பும் வராது.
எனவே அவர்கள் வாழும் காலத்தில் அவர்கள் கருத்துக்கள் சரியோ பிழையோ நேரம் ஒதுக்கி அவற்றிற்கு செவி சாயுங்கள். வாழ்வில் எவ்வளவு கடமை செய்தும் தீர்க்க முடியாத ஒரு கடன் பெற்றவர் கடன். நாம் அவர்களின் வித்துக்கள்.
பிள்ளைகளின் சரிபிழைகள் பெற்றோர்களை அதிகம் பாதிப்பதில்லை. ஆனால் பிள்ளைகள் தமது நவீன வாழ்வு முறைகளையும் உலக அனுபவங்களையும் வைத்து பெற்றோர்களின் சிறு சிறு தவறுகள் காரணமாக தொலைவாகவே சென்று விடுகின்றனர். பிரபஞ்ச விதிப்படி மூலத்தில் இருந்து அண்டம் பரந்து விரிந்தாலும் விதைகளுக்கான விருட்சங்களின் சக்தித்தொடர்பு தொடர்ந்து கொண்டே இருக்கும். இருக்கவும் வேண்டும். ஏழு தலைமுறைகளின் அணுக்கள் எம்மிடம் உண்டு.
எம் பெற்றோர் பற்றிய அக்கறை எமக்கு இல்லா விடினும் அவர்களுக்கு முன் உள்ள ஆறு தலைமுறை பிதிர்களுக்கு உண்டு. அவர்கள் தம் சந்ததிகளின் சரிபிழைகளை தட்டிக் கேட்காமல் விடப் போவதில்லை. அது தவிர அந்த அணுக்கட்டமைப்புக்களும் அடுத்து வரும் சந்ததிகள் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தும். இதில் தவறிழைத்துத்தான் பித்துரு சாந்தி அது இது என எவ்வளவோ பரிகாரங்கள் மேற்கொள்கின்றனர். தசரதன் ஆகட்டும், இரணியன் ஆகட்டும், கைகேயி ஆகட்டும் சீதா தேவி ஆகட்டும் அவர்கள் வித்தில் வந்தவர்கள் அவர்களுக்கு பணிந்து நடந்திடல் வேண்டும். அதையே புராணங்களும் கூறியுள்ளன. அவர்களின் மனத்தாங்கல் வாழ்வின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காணச் செய்துவிடும். அதன் சக்தித் தொடர்பில் விரிசல்கள் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். தெய்வத்தின் அருள் கூட பெற்றோரின் ஆசி இருந்தால் மட்டுமே எம்மை நெருங்கும்.
எனவே அவர்கள் வாழும் காலத்தில் அவர்கள் கருத்துக்கள் சரியோ பிழையோ நேரம் ஒதுக்கி அவற்றிற்கு செவி சாயுங்கள். வாழ்வில் எவ்வளவு கடமை செய்தும் தீர்க்க முடியாத ஒரு கடன் பெற்றவர் கடன். நாம் அவர்களின் வித்துக்கள்.
பிள்ளைகளின் சரிபிழைகள் பெற்றோர்களை அதிகம் பாதிப்பதில்லை. ஆனால் பிள்ளைகள் தமது நவீன வாழ்வு முறைகளையும் உலக அனுபவங்களையும் வைத்து பெற்றோர்களின் சிறு சிறு தவறுகள் காரணமாக தொலைவாகவே சென்று விடுகின்றனர். பிரபஞ்ச விதிப்படி மூலத்தில் இருந்து அண்டம் பரந்து விரிந்தாலும் விதைகளுக்கான விருட்சங்களின் சக்தித்தொடர்பு தொடர்ந்து கொண்டே இருக்கும். இருக்கவும் வேண்டும். ஏழு தலைமுறைகளின் அணுக்கள் எம்மிடம் உண்டு.
எம் பெற்றோர் பற்றிய அக்கறை எமக்கு இல்லா விடினும் அவர்களுக்கு முன் உள்ள ஆறு தலைமுறை பிதிர்களுக்கு உண்டு. அவர்கள் தம் சந்ததிகளின் சரிபிழைகளை தட்டிக் கேட்காமல் விடப் போவதில்லை. அது தவிர அந்த அணுக்கட்டமைப்புக்களும் அடுத்து வரும் சந்ததிகள் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தும். இதில் தவறிழைத்துத்தான் பித்துரு சாந்தி அது இது என எவ்வளவோ பரிகாரங்கள் மேற்கொள்கின்றனர். தசரதன் ஆகட்டும், இரணியன் ஆகட்டும், கைகேயி ஆகட்டும் சீதா தேவி ஆகட்டும் அவர்கள் வித்தில் வந்தவர்கள் அவர்களுக்கு பணிந்து நடந்திடல் வேண்டும். அதையே புராணங்களும் கூறியுள்ளன. அவர்களின் மனத்தாங்கல் வாழ்வின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காணச் செய்துவிடும். அதன் சக்தித் தொடர்பில் விரிசல்கள் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். தெய்வத்தின் அருள் கூட பெற்றோரின் ஆசி இருந்தால் மட்டுமே எம்மை நெருங்கும்.
அகங்காரம் ஒன்றே அத்தனை துன்பங்களுக்குமான ஆணி வேர். அகங்காரம் துறப்பீர். குறைந்தபட்சம் பெற்றவரோடாயினும்.
பிறர் அசிங்கம் செய்த கழிவறைக்குள் நுழைந்தவுடன் மூக்கை பொத்தும் போதாவது உங்கள் பெற்றோரை நினையுங்கள். அவர்கள் எத்தனை முறை சோற்றுக்குள் கையை வைக்கும் போது மடியில் இருந்து சேலையில் அசிங்கம் பண்ணியிருப்பீர்கள் என. பம்பர்சும், தள்ளுவண்டிலுமா பாவித்தார்கள் அவர்கள். பெற்றோரை இழந்தவர்கள் அநாதரவாய் உள்ள இலட்சக்கணக்கான பெற்றோரை தத்தெடுத்து தவறிய கடமைகளை சரிப்படுத்த முயல்வீர்
பெற்றோர் நலம் காப்பீர் அவர்களின் ஆசிகள் உங்களுக்கும் உங்களைத் தொடர்ந்து வரும் சந்ததிகளுக்கும் கிடைக்கட்டும்
கரிணி
03,01,2020
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
பிறர் அசிங்கம் செய்த கழிவறைக்குள் நுழைந்தவுடன் மூக்கை பொத்தும் போதாவது உங்கள் பெற்றோரை நினையுங்கள். அவர்கள் எத்தனை முறை சோற்றுக்குள் கையை வைக்கும் போது மடியில் இருந்து சேலையில் அசிங்கம் பண்ணியிருப்பீர்கள் என. பம்பர்சும், தள்ளுவண்டிலுமா பாவித்தார்கள் அவர்கள். பெற்றோரை இழந்தவர்கள் அநாதரவாய் உள்ள இலட்சக்கணக்கான பெற்றோரை தத்தெடுத்து தவறிய கடமைகளை சரிப்படுத்த முயல்வீர்
பெற்றோர் நலம் காப்பீர் அவர்களின் ஆசிகள் உங்களுக்கும் உங்களைத் தொடர்ந்து வரும் சந்ததிகளுக்கும் கிடைக்கட்டும்
கரிணி
03,01,2020
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை