வனங்கள் தன் புன்னகையைக் காட்டும் நாள் விரையும்!!

அன்னையாகும் மாண்பில்
ஆணினம் குறைந்தது அல்ல
ஊழிக்காலத்தில் எச்சிலாய்
காடுகள் கனல் முகம் ஏகின

முதலாளித்துவச் சிந்தனையும்
முகவரி அற்ற உலகைக் கைப்பற்றலும்
காலச் சாத்தான்களில் கனவுப்போதை ஆயின

இனத்தை அழித்தனர்
குலத்தை அழித்தனர்
காட்டை அழித்தனர்
கடலை அழித்தனர்

வான் வரை சென்று காற்றையும்
களவாடினான்

ஈராக்கில் நுழைந்த அமெரிக்கா போலவோ
காஸ்மீரில் நுழைந்த இந்திய இராணுவம் போலவோ
ஈழத்தில் நுழைந்த சிங்களன் போலவோ

எல்லைக் கோட்டைக் கிழித்து
உலகின் உரிமைச் சொத்துகளை எரித்துத் தின்னுகிறது உறங்கிக் கிடக்கும் மனித பூதம்

ஆதி மனிதனின் முதல் வெற்றி
நெருப்பைக் கண்டு பிடித்தமை
இற்றை மனிதனின் முதல்த்தோல்வி
உலகை நெருப்பாக்கியமை

உலகமே சேர்ந்து நந்திக்கடலை
சிவப்பாக்கி மகிழ்ந்தது போல்
சிவந்த மனிதன் நெருப்பில் கரைய
வனங்கள்  தன் புன்னகையைக் காட்டும்
 நாள் விரையும்

அன்று அமேசனும் அவுஸ்திரேலியனும்
 அழும் கண்ணீரை யாரும் துடைக்க வரார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.