கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு - பகுதி 3📷

நாம் வட கிழக்குப் பகுதிகளில் பரவலாக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வருகிறோம் என்பதை இதற்கு முன்னராகவும் இங்கு அறியத் தந்திருக்கின்றோம்.


அந்த வகையில் எமது மூன்றாவது பகுதி நிகழ்வுகள் நேற்று (04.01.2020) உருத்திரபுரம் - கிளிநொச்சி மற்றும் முள்ளிவாய்க்கால்- முல்லைத்தீவு ஆகிய இடங்களில் நடைபெற்றது.

அறிவொளி மன்றத்தின் இந்த "1000 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டம்" கிழக்கில் மூன்று பாடசாலைகளிலும், வடக்கில் இது வரை இரு பாடசாலைகளிலும் சிறப்பாக நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் நேற்றைய தினம் (04.01.2020) எமது மன்றத்தின் உறுப்பினர் திரு. சஜீபன் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க உருத்திரபுரம் பகுதியில் ஒரு தொகை மாணவர்களுக்கான உதவிகளை வழங்கி வைத்தோம். இந்த நிகழ்வை எமது மன்றத்தின் செயலாளர் திரு. நிறோச் மிதுன் அவர்கள் தலைமை தாங்கி நடத்திய அதே வேளை, அந்தப் பகுதி பிரதேச செயலாளர் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மேலும் இந்த நிகழ்வினை முன்னிட்டு திருகோணமலையில் இருந்து எமது மன்றத்தின் தலைவர் திரு. ரெஜினோல்ட் சுதர்சன் , உபதலைவி செல்வி. சஞ்சனா ஆகியோருடன் திரு. மோசஸ் நிரோஜன், திரு. டினேஷ் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய மன்றத்தின் செயலாளர் கலந்து கொண்ட பெற்றோர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களுக்கு எதிர்காலத்தில் எமது திட்டங்கள் தொடர்பிலும் விளக்கமளித்தார். அத்தோடு சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்த பிரதேச செயலாளர், அறிவொளி மன்றத்தின் செயற்பாடுகளை பாராட்டியதுடன், இதுபோல் உதவிகளை தொடர்ச்சியாக அளிக்குமாறும் கேட்டுக்கொண்டார், அத்தோடு எமது மன்ற உறுப்பினர் அனைவருக்கும் அவரது நன்றிகளையும் தெரிவித்தார்.

இதே வேளை முள்ளிவாய்க்கால் பகுதியிலும் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது. இந்த நிகழ்வும் எமது மன்றத்தின் செயலாளர் திரு. நிறோச் மிதுன் தலைமையில் திரு. வவிசனின் உதவியுடன் இடம்பெற்றது. அந்த பகுதியை சேர்ந்த நிரோஷன் என்பவரின் வேண்டுகோளிற்க்கிணங்க ஒரு தொகை கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்ட்து. மேலும் அப்பகுதில் மாலை நேர வகுப்பு ஆசிரியர்களால் மாலைநேர வகுப்பிற்கு உதவிகள் கேட்கப்பட்டதற்கு  அமைவாக அறிவொளி மன்றம் சில உதவிகளையும் வழங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்விலும் மேற்குறிப்பிடட அறிவொளி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் நிழற்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி
ஊடகப்பிரிவு
அறிவொளி மன்றம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.