ஈரானிய விமான விபத்து - 63 கனேடியர்கள் பலி!

ஈரானின் தெஹ்ரான் நகரில் நடந்த விமான விபத்தில் கனேடிய பிரஜைகள் 63 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



விமான விபத்தில் விமானத்தில் பயணித்த 176 பேரும் உயிரிழந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 80 பேர் ஈரானியர்கள். 63 பேர் கனேடியர்கள். 11 பேர் உக்ரைன் நாட்டவர்கள். 10 பேர் சுவிடன் நாட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

விபத்துக்கு உள்ளான போயிங் 737 ரக பயணிகள் விமானம் தெஹ்ரான் நகரில் உள்ள இமாம் கொமேய்னி விமான நிலையத்தில் இருந்து உக்ரைனின் கியூவ் விமான நிலையத்தினை நோக்கி புறப்பட்டு வானில் பறந்துக்கொண்டிருந்த போதே விபத்துக்குள்ளானது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.