போலீஸ் வாகனத்தில் டிக் டாக்: மாணவர்களுக்கு நூதன தண்டனை!
தூத்துக்குடியில் போலீஸ் வாகனத்தில் டிக் டாக் செய்த மாணவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.
டிக் டாக்கும் செல்பி மோகமும் இளைஞர்களிடத்தில் அதிகரித்து வருகிறது. தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகிறோம் என்ற பேரில் ஒரு சிலர் சர்ச்சையில் சிக்குவதும் நடந்து வருகிறது. அதன்படி தூத்துக்குடியில் போலீஸ் வாகனத்தில் டிக் டாக் செய்தவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.
அம்மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கோகுலகிருஷ்ணன் (17), செகுவேரா (21), சீனு (17). இவர்கள் மில்லர்புரத்தில் உள்ள ஆயுதப்படை முகாம் அருகே நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது ஏறி நடிகர் விஜய் பட வசனத்துக்கு டிக் டாக் செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் இந்த வீடியோ சம்பந்தப்பட்ட காவல் துறையினர் குழுக்களுக்கே வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், சம்பந்தப்பட்ட இளைஞர்களைத் தேடியுள்ளனர். இதையடுத்து அவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மாணவர்களை எஸ்.பி. அருண் பாலகோபாலன் அழைத்து, டிக் டாக் பொழுதுபோக்கின் எல்லை என்னவென்று அறிவுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியைச் செய்ய வேண்டும் என்று தண்டனை வழங்கியுள்ளார். இந்நிலையில் இன்று தூத்துக்குடி நகரில் உள்ள 3 இடங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
டிக் டாக்கும் செல்பி மோகமும் இளைஞர்களிடத்தில் அதிகரித்து வருகிறது. தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகிறோம் என்ற பேரில் ஒரு சிலர் சர்ச்சையில் சிக்குவதும் நடந்து வருகிறது. அதன்படி தூத்துக்குடியில் போலீஸ் வாகனத்தில் டிக் டாக் செய்தவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.
அம்மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கோகுலகிருஷ்ணன் (17), செகுவேரா (21), சீனு (17). இவர்கள் மில்லர்புரத்தில் உள்ள ஆயுதப்படை முகாம் அருகே நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது ஏறி நடிகர் விஜய் பட வசனத்துக்கு டிக் டாக் செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் இந்த வீடியோ சம்பந்தப்பட்ட காவல் துறையினர் குழுக்களுக்கே வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், சம்பந்தப்பட்ட இளைஞர்களைத் தேடியுள்ளனர். இதையடுத்து அவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மாணவர்களை எஸ்.பி. அருண் பாலகோபாலன் அழைத்து, டிக் டாக் பொழுதுபோக்கின் எல்லை என்னவென்று அறிவுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியைச் செய்ய வேண்டும் என்று தண்டனை வழங்கியுள்ளார். இந்நிலையில் இன்று தூத்துக்குடி நகரில் உள்ள 3 இடங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை