ஏவுகணை தாக்குதல் எல்லாம் நன்மைக்கே- டொனால்ட் ட்ரம்ப்!!

ஈராக் தலைநகர் பாக்தாத் நகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க அல் ஆசாத் மற்றும் இர்பில் விமானப்படை தளங்கள் மீது ஈரான் அடுத்தடுத்து 9 முறை ஏவுகணைகளை வீசி இன்று புதன்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளது. 12-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது

இதுகுறித்து அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ருவிட்டரில் எல்லாம் நன்மைக்கே! ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்காவின் இரு ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் தொடர்பான மதிப்பீடு பணி நடைபெற்று வருகிறது. இதுவரை எல்லாம் நன்றாகவே நடந்துள்ளது! உலகின் மிக சக்திவாய்ந்த ராணுவம் அமெரிக்காவிடம் உள்ளது! இதுதொடர்பாக நாளை காலை ஒரு அறிக்கையை வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.