போதையில் தண்டவாளத்தில் தலை வைத்தவர் ரயிலில் மோதி பலி!
திருகோணமலை, சீனன் குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொட்பே பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் மதுபோதையில் தலை வைத்தவர் ரயில் மோதியதில் பலியானதாக சீனன் குடா பொலிஸார் தெரிவித்தனர்.
மதுபோதையில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இவ்வாறு இறந்தவர் மீனவர் கிராமம், கொட்பே எனும் விலாசத்தில் வசிப்பவர் எனவும் இறந்தவரின் வயது 40 எனவும் சீனன் குடா பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு தம்பலகாமத்தில் இருந்து திருகோணமலையை நோக்கிச் சென்ற இரவு ரயிலானது சுமார் அதிகாலை 1.15 மணி அளவில் கொட்பே பிரதேசத்தை கடக்கும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சீனன் குடா பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் ரயில் தண்டவாளத்தில் மீட்கப்பட்ட சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை