பாக். குழந்தைக்கு ’குடியுரிமை’ எனப் பெயரிட்ட அமைச்சர்!
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜகவினர் பேரணி நடத்துகின்றனர். இன்று டெல்லியில் நடந்த பேரணியில் பாகிஸ்தானின் இந்து மத குழந்தைக்கு மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ’குடியுரிமை’ என்று பெயரிட்டுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், பாஜக அதற்கு ஆதரவாகப் பேரணி நடத்தி வருகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர கட்சியின் 42 மூத்த தலைவர்கள் தலைமையில் 42 இடங்களில் வீடு வீடாகச் சென்று சிஏஏவுக்கு ஆதரவாகப் பேரணி நடத்தப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் இன்று அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கலந்து கொண்ட பேரணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து குழந்தைக்குக் குடியுரிமை (நாகரிகத்தா ) என்று பெயரிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் 7 ஆண்டுகளாக வசித்து வந்த இந்து மத குடும்பத்தினருக்குக் குடியுரிமை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது அவர்கள் இந்தியா வந்துள்ள நிலையில், இன்று நடைபெற்ற சிஏஏ ஆதரவு பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.
அப்போது பாகிஸ்தான் இந்து அகதி பெண் மத்திய அமைச்சரைச் சந்தித்து தனது குழந்தைக்குப் பெயர் வைக்குமாறு கூறியுள்ளார். அப்போது குழந்தைக்குக் குடியுரிமை என்று பெயரிட்டுள்ளார் ரவி சங்கர் பிரசாத். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அந்த குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது குழந்தைக்குப் பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ’குடியுரிமையின்’ தாய் ஆர்த்தி கூறுகையில், எங்களது மகள் எங்கள் வீட்டின் மகாலட்சுமி. குழந்தையின் பிறப்பால் நமது குடியுரிமையின் பாதை திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது மிக்க மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், பாஜக அதற்கு ஆதரவாகப் பேரணி நடத்தி வருகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர கட்சியின் 42 மூத்த தலைவர்கள் தலைமையில் 42 இடங்களில் வீடு வீடாகச் சென்று சிஏஏவுக்கு ஆதரவாகப் பேரணி நடத்தப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் இன்று அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கலந்து கொண்ட பேரணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து குழந்தைக்குக் குடியுரிமை (நாகரிகத்தா ) என்று பெயரிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் 7 ஆண்டுகளாக வசித்து வந்த இந்து மத குடும்பத்தினருக்குக் குடியுரிமை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது அவர்கள் இந்தியா வந்துள்ள நிலையில், இன்று நடைபெற்ற சிஏஏ ஆதரவு பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.
அப்போது பாகிஸ்தான் இந்து அகதி பெண் மத்திய அமைச்சரைச் சந்தித்து தனது குழந்தைக்குப் பெயர் வைக்குமாறு கூறியுள்ளார். அப்போது குழந்தைக்குக் குடியுரிமை என்று பெயரிட்டுள்ளார் ரவி சங்கர் பிரசாத். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அந்த குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது குழந்தைக்குப் பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ’குடியுரிமையின்’ தாய் ஆர்த்தி கூறுகையில், எங்களது மகள் எங்கள் வீட்டின் மகாலட்சுமி. குழந்தையின் பிறப்பால் நமது குடியுரிமையின் பாதை திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது மிக்க மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை