பாலியல் வழக்கு: திலீப்பை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு!
நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் கைதாகி தற்போது ஜாமினில் வெளியிலிருக்கும் நடிகர் திலீப் சமர்ப்பித்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது கேரள உயர்நீதிமன்றம்.
ஷுட்டிங்கில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த நடிகையை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஏற்படுத்திய வழக்கில் நடிகர் திலீப் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களை குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து சிறை தண்டனை வழங்கியது கேரள உயர்நீதிமன்றம். இதனையடுத்து குற்றவாளிகள் மேல்முறையீடு செய்து தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைத்தனர். ஆனால், அந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது கேரள உயர்நீதிமன்றம். இந்நிலையில், நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய பாலியல் குற்ற வழக்கில், எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் நடிகர் திலீப் இந்த வழக்கில் தன் மீது குற்றம் சுமத்த போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது திலீப் தரப்பு வாதங்களுக்கு பதில் அளிக்க கோரி அரசு தரப்பிடம் கேட்கப்பட்டது. போதிய ஆதாரங்கள் இல்லை என்று திலீப் தரப்பு கூறுவதில் உண்மை இல்லை என்றும், ஏற்கனவே போதிய ஆதாரங்களை சமர்ப்பித்ததால் தான் குற்றவாளிகளை பிடிக்க முடிந்தது என்றும் அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
திலீப் தரப்பில் எந்தவிதமான ஆதாரங்கள் இல்லை என்று குறிப்பிட்டுச் சொன்னால் அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராக இருப்பதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது. வழக்குக்கு தேவையான அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விட்டதாகவும், குற்றம் சுமத்தப்பட்டவரின் தரப்பில் தான் வாய்தா மேல் வாய்தா வாங்கி வழக்கை தாமதப்படுத்துவதாகவும் காவல்துறை தரப்பில் குறிப்பிடப்பட்டது. வாய்தா வாங்காமல் வழக்கை சந்திக்க தயார் என்றால் விரைந்து வழக்கை முடித்து விடலாம் என்று அரசு தரப்பில் இருந்து திலீப் தரப்பிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளிக்கவும் கால அவகாசம் தேவை என்று திலீப் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று திலீப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது கேரள உயர்நீதிமன்றம்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
ஷுட்டிங்கில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த நடிகையை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஏற்படுத்திய வழக்கில் நடிகர் திலீப் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களை குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து சிறை தண்டனை வழங்கியது கேரள உயர்நீதிமன்றம். இதனையடுத்து குற்றவாளிகள் மேல்முறையீடு செய்து தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைத்தனர். ஆனால், அந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது கேரள உயர்நீதிமன்றம். இந்நிலையில், நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய பாலியல் குற்ற வழக்கில், எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் நடிகர் திலீப் இந்த வழக்கில் தன் மீது குற்றம் சுமத்த போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது திலீப் தரப்பு வாதங்களுக்கு பதில் அளிக்க கோரி அரசு தரப்பிடம் கேட்கப்பட்டது. போதிய ஆதாரங்கள் இல்லை என்று திலீப் தரப்பு கூறுவதில் உண்மை இல்லை என்றும், ஏற்கனவே போதிய ஆதாரங்களை சமர்ப்பித்ததால் தான் குற்றவாளிகளை பிடிக்க முடிந்தது என்றும் அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
திலீப் தரப்பில் எந்தவிதமான ஆதாரங்கள் இல்லை என்று குறிப்பிட்டுச் சொன்னால் அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராக இருப்பதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது. வழக்குக்கு தேவையான அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விட்டதாகவும், குற்றம் சுமத்தப்பட்டவரின் தரப்பில் தான் வாய்தா மேல் வாய்தா வாங்கி வழக்கை தாமதப்படுத்துவதாகவும் காவல்துறை தரப்பில் குறிப்பிடப்பட்டது. வாய்தா வாங்காமல் வழக்கை சந்திக்க தயார் என்றால் விரைந்து வழக்கை முடித்து விடலாம் என்று அரசு தரப்பில் இருந்து திலீப் தரப்பிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளிக்கவும் கால அவகாசம் தேவை என்று திலீப் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று திலீப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது கேரள உயர்நீதிமன்றம்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை