ஸ்மார்ட்ஃபோன்: இந்தியா இரண்டாவது இடம்!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு, இந்தியா மிகப்பெரிய வியாபார சந்தையாக இருந்துவருகிறது. வருடத்திற்கு பல லட்சக்கணக்கான ஸ்மார்ட்ஃபோன்களை விற்பனை செய்யும் உலக நாடுகள் பட்டியலில், இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில்.


2019ஆம் ஆண்டில் மட்டும் 158 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களை விற்பனை செய்து, ஸ்மார்ட்ஃபோன் சந்தை விற்பனை செய்யும் நாடுகள் பட்டியலில் அமெரிக்காவை மூன்றாவது இடத்திற்கு தள்ளிவிட்டு, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளில் 'Xiaomi, Vivo, Oppo, மற்றும் Oneplus' போன்ற ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்கள், அதிக ஸ்மார்ட்ஃபோன்களை விற்பனை செய்துள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்ஃபோன்கள் 2018ஆம் ஆண்டை விட, 2019ஆம் ஆண்டில் 12 சதவீதம் உயர்ந்து, 72 சதவீத பங்குகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங்கை பின்னுக்கு தள்ளிய வீவோ

இதற்கிடையில் இந்தியாவில் அதிக ஸ்மார்ட்ஃபோன்களை விற்பனை செய்தவர்கள் பட்டியலில் சாம்சங் நிறுவனம் இரண்டாவது இடத்தில் இருந்தது. 'கவுண்டர் பாயிண்ட்' வெளியிட்டுள்ள அறிக்கையில், வீவோ நிறுவனம், சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஸ்மார்ட்ஃபோன் விற்பனைகளில் இந்தியாவில் ஷியோமி நிறுவனம் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.