ரவுடி பினு பாணியில் கேக் வெட்டிய மாணவர்!

சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் ரவுடி பினு ஸ்டைலில் கத்தியால் கேக் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



சென்னை மதுரவாயலை அடுத்த நெற்குன்றம் பகுதியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் கடந்த 11ஆம் தேதி இரவு சக நண்பர் ஒருவரின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். பிறந்தநாள் பரிசாகச் சம்பந்தப்பட்ட மாணவருக்குப் பண மாலை அணிவித்ததுடன் மலர் கிரீடம் வைத்து கொண்டாடியுள்ளனர். அதுமட்டுமின்றி நான்கு அடி நீளமுடைய வாளையும் பரிசாகக் கொடுத்து உள்ளனர்.

அந்த வாளை பயன்படுத்திச் சம்பந்தப்பட்ட மாணவர் கேக் வெட்டி உள்ளார். இதை சக நண்பர்கள் புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த வீடியோ போலீஸாரின் கவனத்துக்கும் சென்றுள்ளது. இதையடுத்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை மதுரவாயல் போலீஸார் தேடி வருகின்றனர்.

இதில் கேக் வெட்டிய மாணவர் சென்னையை அடுத்த நெற்குன்றத்தைச் சேர்ந்த கமலேஷ் என்பதும் அவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டக் கல்லூரி ஒன்றில் பயின்று வருவதும் தெரியவந்துள்ளது.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் வடக்கு மலையாம்பாக்கத்தில் தனது கூட்டாளிகளுடன் ரவுடி பினு தனது பிறந்தநாளைப் பட்டாக்கத்தி மூலம் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரை போலீஸார் கைது செய்தனர். தற்போது ரவுடி பினு பாணியில் மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாடியது பொது மக்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.