தமிழ்நாட்டிலிருந்து இராமகிருஷ்ண மிஷன் குழுவினர் வருகை!!

தமிழ்நாட்டிலிருந்து இராமகிருஷ்ண மிஷன் குழுவினர் மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ள நிலையில் அவர்களுக்கு அங்கு விசேட வரவேற்பு அளிக்கப்பட்டது.


மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனுக்கு தமிழ்நாடு, விழுப்புரம் இராமகிருஷ்ண மிஷனின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி பரமசுகானந்தஜி மஹராஜ் உள்ளிட்ட குழுவினர் இன்று (சனிக்கிழமை) விஜயம் செய்தனர்.

இந்நிலையில், மட்டக்களப்பு கல்லடி மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து பெருமளவான பக்தர்கள் மற்றும் இராமகிருஷ்ணமிஷன் பழைய மாணவர்களினால் அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கொழும்பு இராமகிருஷ்ண மிஷனின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஆக்ஷராத்மானந்தஜி மற்றும் மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிஷன் முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷானந்தர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சிவானந்தா தேசிய பாடசாலை, விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவர்களின் வாத்திய குழு வரவேற்புடன் ஊர்வலமாக சுவாமிகள் அழைத்துச்செல்லப்பட்டனர்.

இதன்போது, வீதிகளில் பக்தர்கள் நிறைகுடங்களை வைத்து சுவாமிகளை வரவேற்றதுடன் ஆசிகளையும் பெற்றுக்கொண்டனர். சுவாமிகள் இராமகிருஷ்ண மிஷனை வந்தடைந்ததும் அங்குள்ள இராமகிருஷ்ணர் வழிபாட்டு மண்டபத்தில் பூசைகள் நடைபெற்றன.

அதனைதொடர்ந்து பக்தர்களுக்கு சுவாமிகளினால் ஆசிர்வாதம் வழங்கப்பட்டதுடன் பிரசாதங்களும் வழங்கிவைக்கப்பட்டன. இன்றைய வரவேற்பு நிகழ்வில் பெருந்தரளான மக்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனுக்கு புதிய உதவிப் பொது முகாமையாளராக ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.